Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் ... கச்சபேஸ்வரர் கோவிலில் முருக்கடி சேவை உற்சவம்! கச்சபேஸ்வரர் கோவிலில் முருக்கடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடவாவி உற்சவம் பாலாற்றில் எழுந்தருளிய வரதர்!
எழுத்தின் அளவு:
நடவாவி உற்சவம் பாலாற்றில் எழுந்தருளிய வரதர்!

பதிவு செய்த நாள்

06 மே
2015
12:05

காஞ்சிபுரம்: சித்திரை பவுர்ணமிக்கு நடைபெறும் நடவாவி உற்சவத்தில், காஞ்சிபுரம் பாலாற்றில், வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். காஞ்சிபுரம் அடுத்த, பாலாற்றில் நடைபெற்ற நடவாவி உற்சவத்தை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணியளவில், வரதராஜ பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவியருடன் கோவிலில் இருந்து புறப்பட்டு, செவிலிமேடு, புஞ்சையரசந்தாங்கள், துாசி, நத்தகொள்ளை, துாசிவாகை போன்ற பகுதிகளில் வீதியுலா சென்று, திங்கட்கிழமை ஐயங்கார்குளம் சஞ்சீவராயர் கோவில் மண்டபத்தில், இரவு, 8:30 மணியளவில் எழுந்தருளினார். அங்கு, பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, அன்று இரவு, 9:30 மணியளவில் அப்பகுதியில் உள்ள நடவாவி கிணற்றில் பெருமாள் எழுந்தருளினார். அன்று இரவு, 11:30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு, நள்ளிரவு, 1:00 மணிக்கு செவிலிமேடு பாலாற்றில் எழுந்தருளிய பெருமாளுக்கு திருமஞ்சனமும், பிரம்ம ஆராதனமும் நடந்தது. இதையடுத்து, அதிகாலை, 2:15 மணியளவில், பாலாற்றில் இருந்து புறப்பட்ட பெருமாள், விளக்கொளி பெருமாள் கோவிலுக்கு சென்றார். அங்கு, மண்டகப்படி முடிந்த பின், நேற்று காலை, 6:00 மணிக்கு, வரதராஜ பெருமாள் கோவிலை சென்றடைந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தில்லையாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar