பழநி :மூவேந்தர்கள் திருப்பணி செய்த பழநி பெரியாவுடையார் சிவன் கோயிலில் மே 22ல் கும்பாபிஷேகம் நடக்கிறது.இக்கோயிலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சேரர், சோழர், பாண்டிய மன்னர்கள் திருப்பணி செய்ததற்கான சான்றுகள் உள்ளன. பங்குனி உத்திரம், தைப்பூச விழாவிற்கு வரும் பக்தர்கள் இக்கோயிலில் தங்கி வழிபடுகின்றனர்.கடந்த 1993ல் கும்பாபிஷேகம் நடந்தது. சமீபத்தில் ரூ.85 லட்சத்தில் திருப்பணிகள் முடிந்துள்ளன. மே22 ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.