நெல்லிக்குப்பம்: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் 108 முறை கோவிலை வலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். பரம்பரை தர்மகர்த்தாக்கள் நடன சபாபதி, சுந்தரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். அருள்தரும் ஐயப்பன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜைகளை முருகன் குருக்கள் செய்தார்.