பதிவு செய்த நாள்
13
மே
2015
11:05
திருத்தணி: திருத்தணி, காந்தி நகர் பகுதியில் உள்ள கங்கையம்மன் கோவிலில், நேற்று ஜாத்திரை திருவிழா நடந்தது. விழாவை ஒட்டி, காலை 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. தொடர்ந்து, பூ கரகம் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தது. காலை 10:00 மணி முதல், கோவில் வளாகத்தில், திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தன. அதே போல், திருத்தணி அடுத்த, ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஜாத்திரை திருவிழா நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, தேசம்மன் கோவிலில், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தன. மாலை, பூ கரகம் ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடந்தன. இரவு 7:30 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. பின்னர், பூ கரகத்துடன் கங்கையம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.