நாகர்கோவில் : கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா கடந்த மூன்றாம் தேதி தொடங்கி பத்து நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் விழாவில் மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தினமும் அம்மன் ஊர்வலம், சமய வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பண்பாட்டு போட்டிகள், சிறப்பு பூஜைகள், சுதர்சன ஹோமம், இந்து சமய மாநாடு போன்றவை நடைபெற்றது. ஒன்பதாம் நாள் நாள் விழாவில் 11 யானைகள் அணிவகுக்க அம்மனுக்கு அபிஷேக பால்குட ஊர்வலம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.