Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாமூரில் அப்பர் குருபூஜை ... தில்லைக்காளியம்மன் கோவிலில் தெருவடைச்சான் உற்சவம்! தில்லைக்காளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாலீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் தீவிரம்!
எழுத்தின் அளவு:
திருவாலீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் தீவிரம்!

பதிவு செய்த நாள்

14 மே
2015
10:05

மாமல்லபுரம்: கூவத்துார், திருவாலீஸ்வரர் கோவிலில், 1.5 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கூவத்துாரில், திரிபுரசுந்தரி உடனுறை திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில், மாமல்லபுரத்தில் செயல்பட்டு வரும் ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை நிர்வாகம், இக்கோவிலை நிர்வகித்து வருகிறது.

குழந்தை பாக்கியம்: ராமாயண சுக்ரீவனின் சகோதரர் வாலி, இக்கோவில் இறைவனை வழிபட்டதால், இறைவன் திருவாலீஸ்வரராக விளங்குகிறார். கூவத்துார், கிழக்கு கடற்கரை சாலை அருகில், 1 ஏக்கர் பரப்பளவில், இக்கோவில் அமைந்துள்ளது. கோவிலில், சுவாமி, அம்பாள், விநாயகர், முருகர் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருக்கின்றனர். இக்கோவிலின் லிங்கம், பிற கோவில்களில் இருந்து வித்தியாசப்பட்டு, 16 பட்டைகளுடன் உள்ளது; பிற கோவில்களில், இறைவனுக்கு வலதுபுறம் விநாயகர், இடதுபுறம் முருகர் வீற்றிருக்க, இங்கு இருவரும் வலதுபுறமே

வீற்றிருப்பது சிறப்பு
: கோவில் தீர்த்தகுளத்தில் நீராடி, ஈர ஆடையுடன், இறைவன் மற்றும் அம்பாளை, 21 சுற்றுகள் வலம் வந்தால், மகப்பேறு பாக்கியம் கிடைக்கும் என்பதும்; இங்கு வழிபடுபவர்கள், எதிரி தொல்லைகளிலிருந்து விடுபடுவர் என்பதும் ஐதீகம். இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோவிலில், 1937ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், கும்பாபிஷேகம் மற்றும் பராமரிப்பின்றி, 78 ஆண்டுகளாக, பெயரளவிற்கே வழிபாடு நடந்தது. இந்நிலையில், கூவத்துாரைச் சேர்ந்த பக்தரின் முயற்சியால், திருப்பணிகளுக்காக, திருக்கோவில் ஆணையர் பொது நிதி, 14.20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. 1.5 கோடி ரூபாய் மதிப்பில், இப்பணியை திட்டமிட்டு, பக்தர் ஒருவரின் சொந்த நிதி மூலம், அதே ஆண்டு பணி துவக்கப்பட்டது.

90 சதவீத பணிகள்: தற்போது, சன்னிதிகள் புதுப்பிக்கப்பட்டு, அனைத்திற்கும் புதிதாக விமானம்; நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு, அலங்கார மண்டபம்; புதிதாக, ஐந்து நிலை ராஜகோபுரம்; சுற்றுச்சுவர் என, திருப்பணிகள் செய்யப்பட்டு, 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இதுகுறித்து, திருப்பணிகள் குழுவினர் கூறுகையில், இரு ஆண்டுகளுக்கு முன், திருப்பணிகள் துவக்கப்பட்டு, முடியும் நிலையில் உள்ளது. வரும் ஜூலை மாதம், கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை, கூடலழகர் கோவிலில் புரட்டாசி பௌர்ணமியை  முன்னிட்டு பாலாபிஷேக கட்டளை சார்பாக ... மேலும்
 
temple news
உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் இன்று வால்மீகி ஜெயந்தி விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
கேரளா, பாலக்காடு, கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த் திருவிழா நவ., 07 ... மேலும்
 
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar