பதிவு செய்த நாள்
21
மே
2015
10:05
குறிச்சி : சுந்தராபுரம் அருகேயுள்ள நாககாளியம்மன் கோவில் விழா முன்னிட்டு, நேற்று அம்மன் சக்திகரக ஊர்வலம் நடந்தது. சுந்தராபுரத்தை அடுத்த செங்கோட்டையா காலனி நாக காளியம்மன் கோவிலின், 14ம் ஆண்டு விழா, 17ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மறுநாள் வீரபத்ரருக்கு பொங்கல் மற்றும் மகா அபிஷேக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் பலி பீட வழிபாடு, அம்மன் கொடி கட்டுதலும், மாலை அம்மன் அழைத்தலும், இரவு அம்மன் திருக்கல்யாணமும் நடந்தன. நேற்று, காலை குறிச்சி பொங்காளியம்மன் கோவிலிலிருந்து சக்தி கரக ஊர்வலம், பொள்ளாச்சி ரோடு, சாரதா மில் ரோடு வழியாக, கோவிலை சென்றடைந்தது. மதியம் அம்மனுக்கு மகா அபிஷேக பூஜையும், பிரசாதம் வழங்குதலும் நடந்தன.மாலையில் நடந்த மாவிளக்கு வழிபாட்டில், திரளானோர் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர். இன்று, மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.