பதிவு செய்த நாள்
21
மே
2015
10:05
நாகப்பட்டினம்: நாகை,காமாட்சியம்மன் கோவில்,கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்து யானையில் புனித தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெண்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர். நாகை,சாமாந்தான் பேட்டையில் அமைந்துள்ளது மிக பழமையான காமாட்சியம்மன் கோவில்.இக்கோவிலின் கும்பாபிஷேக விழா,வரும் 22 ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கடந்த 19 ம் தேதி கணபதி, நவக்கிரக, லஷ்மி, அஸ்திர ஹோமங்கள் நடந்தது. நேற்று நீலாயதாட்சி அம்மன் கோவிலில் இருந்து யானை மீது புனித தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 7 மணியளவில்,நீலாயதாட்சியம்மன் கோவிலில்,அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைக்கு பின்,யானை மீது தீர்த்தக்குடம் ஏற்றப்பட்டு, ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற தீர்த்தம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கோவிலில் யாகசாலை பூஜைக்கு பின் நாளை (22 ம் தேதி) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயபால்,கலெக்டர் பழனிசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.