பதிவு செய்த நாள்
21
மே
2015
10:05
ஆர்.கே.பேட்டை: சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், நேற்று முன்தினம் சூரிய, சந்திர பிரபைகளில் உற்சவர் வீதியுலா எழுந்தருளினார். நாளை தேர் திருவிழா நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டையில் உள்ள சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவிலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி, காலை 9:00 மணிக்கு, ஸ்தபன திருமஞ்சனம், மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்து வருகிறது. இரவு 7:00 மணிக்கு, சேஷ வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளுகிறார். நேற்று முன்தினம், காலை சூரிய பிரபையிலும், மாலை சந்திர பிரபையிலும், உலா வந்த உற்சவர், நேற்று, இரவு கருட வாகனத்தில் சேவை சாதித்தார். இன்று மாலை, அனுமந்த வாகனத்தில் உலா வரும் பெருமாள், நாளை காலை, தேரில் வீதியுலா எழுந்தருளுகிறார்.