புதுச்சத்திரம்: சம்பாரெட்டிப்பாளையம் சக்கரவர்த்தி திருமகன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. கடலூர் அடுத்த சம்பாரெட்டிப்பாளைய த்தில் உள்ள சக்கரவர்த்தி திருமகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான பூஜை நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை, மிருத்ஸங்கரணம், வேதபிரபந்தத்துடன் துவங்கியது. நேற்று காலை யாகசாலை பூஜை துவங்கியது. இன்று காலை 8:00 மணிக்கு மூ ன்றாம் கால யாக பூஜை, 11 மணிக்கு பூர்ணாஹூதி, மாலை 3:00 மணிக்கு கர்மாங்க ஸ்நபந திருமஞ்சனம், நான்காம் கால யாக பூஜை, 8:00 மணிக்கு பூர்ணாஹூதி நடக்கிறது. நாளை 22ம் தேதி காலை 6:00 மணிக்கு ஐந்தாம் கால யாகபூஜை, 7:00 மணிக்கு யாத்ராதானத்தை தொடர்ந்து 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.