பதிவு செய்த நாள்
22
மே
2015
10:05
திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி திருவிழாவில், இன்று, திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருத்தணி அடுத்த, குடிகுண்டா கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, கடந்த 14ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. மதியம் 2:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, மகாபாரத சொற்பொழிவும், இரவு 10:00 மணிக்கு, நாடகமும் நடந்து வருகிறது. நேற்று, பகாசூரன் வதம் நடைபெற்றது. இன்று, மதியம் 12:00 மணிக்கு, திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. வரும், 25ம் தேதி அர்ச்சுனன் தபசு; 31ம் தேதி காலை துரியோதனன் படுகளம், மாலை 6:30 மணிக்கு, தீமிதி திருவிழா நடக்கிறது. ஜூன் 1ம் தேதி, தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.