Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரையில் தேவார திருவாசக தமிழிசை ... கொப்புடையம்மன் கோயில் தெப்ப திருவிழா! கொப்புடையம்மன் கோயில் தெப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2015
03:05

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி சரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மற்றும் வடபத்ரசயனர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2002ல் நடந்த நிலையில், வடபத்ரசயனர் கோயிலில் பலகோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் முடிந்து, இன்று கும்பாபிஷேகம் நடந்தது.

Default Image
Next News

இதையொட்டி அதிகாலை 5 மணிமுதல் பக்தர்கள் திரண்டனர்.ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர்,வஸ்திரங்கள் மாட வீதிகள் வழியாக வடபத்ரசயனர் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன. காலை 8.24 மணிக்கு அரசின் கூடுதல் தலைமைச் செயலர் கண்ணன், அறநிலையத்துறை ஆணையாளர் வீரசண்முகமணி ஆகியோர் பச்சை கொடியசைக்க கும்பாபிஷேகம் நடந்தது. மூலஸ்தான கோபுரத்தில் விஜயபாஸ்கர் பட்டர், விமானகோபுரத்தில் வாசுதேவன் பட்டர், ராஜகோபுரத்தில் சுரேஷ் பட்டர், நரசிம்மர் கோபுரத்தில் தேவராஜ் பட்டர், சக்கரத்தாழ்வார் கோபுரத்தில் ராஜி பட்டர், ஆண்டாள் நந்தவனத்தில் கோவிந்தாச்சாரி ஆகியோர் தலைமையில் கும்பங்களில் புனித நீர் ஊற்ற தீபராதனை காண்பிக்கபட்டு, பக்தர்கள் மீது புனித நீரும் தெளிக்கப்பட்டது. நாங்குனேரி ஜீயர், ஸ்ரீரங்கம் ஜீயர், திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலர் சீனிவாசராஜீ, உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.விழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் விழாக்கோலம் பூண்டிருந்தது. கோயில் வளாகத்தினை சுற்றி 5 இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோவில் நுழைவாயில்கள் இன்று பிற்பகல் 2:56 மணிக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் காலை உற்சவத்தில் இன்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar