Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாலகுருநாதசுவாமி கோயிலில் வெள்ளி ... திருமறைநாதர் கோயிலில் வைகாசி விழா கொடியேற்றம்! திருமறைநாதர் கோயிலில் வைகாசி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடிந்த நிலையில் கிடக்கும் சேதுக்கரை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் அர்த்த மண்டபம்!
எழுத்தின் அளவு:
இடிந்த நிலையில் கிடக்கும் சேதுக்கரை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் அர்த்த மண்டபம்!

பதிவு செய்த நாள்

23 மே
2015
03:05

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல வைணவத் திருக்கோயில்கள் உள்ளன. திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடற்கரைக்கு செல்லும் வழியில் சின்னக்கோயில் என்றழைக்கப்படும் ஏகாந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் வெளியே தெரியப்படாமல் மரங்களாலும், புதர்களாலும் சிறைப்பிடிக்கப்பட்டு மூலஸ்தான கோபுரக்கலசங்கள், கருவறை, முன்மண்டபம், அர்த்தமண்டபம், தாங்கி நிற்கும் சிற்பத்துõண்கள் பராமரிப்பின்றி மழை, வெயில், இயற்கை சீற்றங்கள் பாதிப்பிற்குள்ளானது குறித்து தினமலர் நாளிதழில் ஜன.17 அன்று படத்துடன் செய்தி வெளியானது. இச்செய்தியை கேள்விப்பட்டவுடன் ராமநாதபுரம் உழவாரப்பணிக்குழுவினர் செடிகளை அகற்றி துõய்மை செய்தனர். இந்நிலையில் (மே.16ல்) கடந்த வாரம் பெய்த மழைக்கு கோயின் கருவறை மற்றும் அர்த்த மண்டபத்தின் பின்புறப்பகுதிகள் முழுமையாக கீழே விழுந்து சேதமடைந்து கிடக்கிறது.

மழைகாலங்களில் நீரால் தேங்கி உள்ளது. திருக்கோஷ்டியூரை சேர்ந்த பட்டாச்சாரியார் ஒருவர் கூறுகையில், ஏகாந்த ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில். சேது ஹிமாச்சலா என்று வேதங்களில் இந்தியாவின் கடைசி தெற்குப்பகுதியாக சேதுக்கரை கூறப்படுகிறது. இங்கிருந்துதான் இலங்கைக்கு கடலில் பாலம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சேதுக்கரை கடற்கரையில்தான் ராவணனின் தம்பி விபீஷணன் ராமபிரானிடம் சரணடைந்தார். ராமர் இங்கு வந்த போது தமிழ்முனிவர் அகத்தியர் ராமபிரானுக்கு ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் வழங்கியதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் உச்சரித்து வழங்கப்படும் துளசி தீர்த்தம், கடுமையான காய்ச்சல், தலைவலியினை குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இக்கோயிலின் அருகே வெண்பளிங்கு அகத்தியர் கோயில் கும்பாபிஷேகம் கண்டுள்ளது. இவ்வளவு சிறப்புகளை தன்னகத்தே கொண்ட இக்கோயிலின் நிலையை காணும்போது கண்ணீரை வரவழைக்கிறது. தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையுடன் இணைந்து சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் பூர்வாங்கப் பணிகளை தொடங்கி, கும்பாபிஷேகத்திற்கு வழிகாணும் முயற்சியை எடுக்க வேண்டும். இதனால், பழமையான பெருமாள் கோயிலின் சிறப்புகளை வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளலாம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் இறைவனுக்கு அம்மையார் அமுதுபடைக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில், வீடு, வீடாக சென்று பிரசாதம் ... மேலும்
 
temple news
சாத்துார்; சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. வெங்கடாஜலபதி கோயில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; திருப்புத்துார் அருகே துவார் கிராமத்தில் 15ம் நுாற்றாண்டு கல்வெட்டை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar