புதுச்சேரி: உலக அமைதி வேண்டி, புதுச்சேரியில் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடந்தது. லட்சுமி விஷ்ணு சகஸ்ரநாம மண்டலி ஏற்பாடு செய் திருந்த 11ம் ஆண்டு பாராயணத்தையொட்டி, நேற்று காலை 5:30 மணிக்கு, நேரு வீதியில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் சுப்ரபாதமும், பின்னர் நாம சங்கீர்த்தனம், பஜனையுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடந்தது. ஜெயராம் திருமண மண்டபத்தில் சகஸ்ரநாம பாராயண நிகழ்ச்சியில், சகஸ்ர நாம மண்டலி தலைவர் ராஜாராம், நிறுவனர் ஜனார்த்தன ராமானுஜதாசன், ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ‘கிருஷ்ண அனுபவம்’ என்ற தலைப்பில், சென்னை பல்கலைக் கழக வைணவத்துறை தலைவர் வேங்கடகிரு ஷ்ணன் உபன்யாசம் நிகழ்த்தினார். பெங்களூரு குரூப் கேப்டன் மணி சுவாமி கள் விஷ்ணு சகஸ்ர நாமத்தை துவக்கி வைத் தார். ‘சின்னப்பூவின் சி ங்காரக் கவிதைகள்’ என்ற தலைப்பில் ருக்மணி பேசினார். மண்டலி பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.