புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த மேட்டுப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது. கடந்த 20ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து 21ம் தேதி இரவு சுவாமி முத்துப்பல்லக்கில் வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான செடல் உற்சவம் நேற்று (22ம் தேதி) நடந்தது. விழாவையொட்டி காலை 11:00 மணிக்கு செடல் உற்சவம், மதியம் 2:00 மணிக்கு சாகை வார்த்தலும், இரவு 9.00 மணிக்கு வாணவேடிக்கையுடன் அம்மன் வீதியுலாவும் நடந்தது. இன்று (23ம் தேதி) மதியம் 2:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி வீதியுலாவும், 24ம் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.