பதிவு செய்த நாள்
25
மே
2015
12:05
மயிலாப்பூர்: மயிலாப்பூர், காமாட்சி அம்மன் உடனுறை வெள்ளீசுவரர் கோவிலில், விடையாற்றி கலைவிழா நேற்று துவங்கியது. மயிலாப்பூர், தெற்கு மாடவீதியில், காமாட்சி அம்மன் உடனுறை வெள்ளீசுவரர் கோவிலில் அமைந்துள்ளது. இக் கோவிலின் வைகாசி பெருவிழா மற்றும் விடையாற்றி கலைவிழா நிகழ்ச்சிகள், ஜூன் 13 வரை நடைபெற உள்ளது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும். நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில், தீர்த்தாம்பட்டரை தோட்டத்தில் புற்றுமண் எடுத்தல், சண்டிகேசுவரர் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 9:00 மணியளவில், செல்வ விநாயகர் மூஷிக வாகன உற்சவம் நடைபெற்றது. இன்று காலை, 6:00 மணிக்கு, மண்டபத்திற்கு கொடியேற்றமும், 7:30 மணிக்கு, பவளக்கால் விமானம் கொடியேற்றுதலும் நடைபெற உள்ளது. இரவு 9:00 மணிக்கு, குருந்த விருட்சத்தடியில் சுக்கிரர் சிவபூஜை காட்சி நடக்கிறது.