பதிவு செய்த நாள்
26
மே
2015
12:05
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த, வள்ளுவர் நகர் மஹா சக்தி மாரியம்மன், செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 29ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, நாளை காலை, 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கொடியேற்றம், தீபாராதணை நடக்கிறது. மாலை, 6 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து ஹோமமும், இரவு, 7 மணிக்கு, யாக சாலை பூஜை, கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை, தீபாராதனை நடக்கிறது. 28ம் தேதி, காலை, 7 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, கணபதி ஹோமம், 10.30 மணிக்கு, புற்று மண் எடுத்தல், கோபுர கலசம் புறப்பாடு, கலச ஸ்தாபனம், மாலை, 6 மணிக்கு, யாக சால பூஜை, நவக்கிரஹ ஹோமம், இரவு, 8 மணிக்கு, ஸ்வாமி சிலைகளுக்கு, மூலிகை திரவிய அபிஷேகம், 10 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. வரும், 29ம் தேதி காலை, 6.30 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை, சண்டி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், யாத்திரா தானம், காலை, 9.15 மணிக்கு மேல், 10.15 மணிக்குள், கணபதி, மஹா சக்தி மாரியம்மன் கோவில், கும்பாபிஷேகம் நடக்கிறது. காரிமங்கலம் அருணேஸ்வரர் கோவில் குருக்கள் புருஷோத்தமன் தலைமையில், சிவாச்சாரியார்கள், கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர். இரவு, 7 மணிக்கு, திருவிளக்கு பூஜை நடக்கிறது. முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ., அன்பழகன் கலந்து கொள்கிறார்.