பதிவு செய்த நாள்
26
மே
2015
02:05
சிவகாசி: சிவகாசியில் விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் எனும் பிரசித்திபெற்ற சிவன் கோயில் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமையில் சூரிய பகவான், திங்கள் சிவலிங்கம், சந்திரன், செவ்வாய்கிழமை செவ்வாய், துர்கை, அம்பாள், புதன் கிழமை புதன் பகவான், வியாழன் தட்சினாமூர்த்தி, வியாழன் பகவான், வெள்ளிக்கிழமை அம்பாள், சுக்கிர பகவான், மகாலட்சுமி, சனிக்கிழமை சனிஸ்வரர், அனுமன், அஸ்டமி திதியன்று பைரவர், பிரதோஷம் அன்று நந்திஸ்வரர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கும் ஏழை எளிய பொதுமக்கள், கிராமத்து பெண்கன் அர்ச்சனை சீட்டு வாங்கி முழு நம்பிக்கையுடன் அர்ச்சனை செய்கிறார்கள். தற்போது அர்ச்சனை சீட்டு விலை திடீரென சில நாட்கள் முன் ஏற்றப்பட்டு உள்ளது. 150 சதவீதம் அதிகமாகி ரூ. 2 இருந்ததை ரூ.5 தாக வசூல் செய்யப்படுகிறது. இதை கேட்டு கோயில் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். சிவகாசியில் மற்ற கோயிகளில் அர்ச்சனை சீட்டு ரூ. 2 ரூபாய்க்கும், ஒரு சில கோயிலில் அர்ச்சனை சீட்டு இல்லாமலும் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே சிவன் கோயிலில் அரசு நிர்னயித்த கட்டணத்தை விட நெய் விளக்கு, வில்வம், குங்குமம், வால் மிளகு விளக்கு, எள் விளக்கு போன்ற சுவாமி பூஜை பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. ரூ. 5, 10, 30, 50, 100 என ஓவ்வொரு பொருட்களுக்கும் தகுந்த விலையுடன் ஏற்றி விற்கப்படுகிறது. இக்கதை தொடர் கதையானால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குறைய வாய்ப்பு உள்ளது. அர்ச்சனை டிக்கெட் 50 சதவீதம் மட்டும் அதிகமாகி ரூ. 3 ஆக குறைக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாகும். பொதுமக்கள் பார்வைக்கு படும்படி பூயை பொருட்களின் விலை பட்டியல் அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும். கூடுதலாக வசூல் செய்யும் குத்தகை காரர்கள் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.