கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த காவனூர் திரவுபதியம்மன் கோவில், தீமிதி உற்சவத்தில் ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கடந்த 5ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தினமும் காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா, அரிச்சந்திரா கதைப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. தீ மிதி உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் (25ம் தேதி) காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, அரவாண் களபலி நிகழ்ச்சி, மாலை 5:30 மணியளவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று (26ம் தேதி) நடந்த மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.