திருவள்ளூர்: திருவள்ளூர், பெரியகுப்பத்தில் உள்ள மூங்காத்தம்மன் கோவிலில், இன்று, பாலாபிஷேகம் நடைபெறுகிறது. திருவள்ளூர், பெரியகுப்பம் காமராஜபுரத்தில், பழமை வாய்ந்த மூங்காத்தம்மன் கோவில் உள்ளது. இங்கு, வைகாசி பவுர்ணமி பூஜையை முன்னிட்டு, மூங்காத்தம்மனுக்கு இன்று காலை 10:30 மணிக்கு, பாலாபிஷேகம் நடைபெறுகிறது. பின், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெறும். மாலை 6:00 மணிக்கு, உற்சவர் அம்பாள் ஆலய பிரதக்ஷணம் நடை பெறுகிறது.