Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாரூர் வல்லுடைய ஐயனார் கோவிலில் ... காரமடை அரங்கநாதர் கும்பாபிஷேக விழா துவக்கம்! காரமடை அரங்கநாதர் கும்பாபிஷேக விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தா கோஷம் முழங்க பவனி வந்த வீரராகவப் பெருமாள் தேர்!
எழுத்தின் அளவு:
கோவிந்தா கோஷம் முழங்க பவனி வந்த வீரராகவப் பெருமாள் தேர்!

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2015
02:06

திருப்பூர்: வெங்கட்ரமணா கோவிந்தா கோஷங்களுக்கு மத்தியில்,  திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்  தேரோட்டம் நேற்று நடந்தது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் மற்றும் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விகாச தேர்த்திருவிழா, 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், விஸ்வேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது. நேற்று, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம், கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப் பெருமாள், ராஜ அலங்காரத்தில், தங்ககிரீடம் அணிந்திருந்தார். மதியம் 2:55 மணிக்கு, மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன், கமிஷனர் அசோகன் உள்ளிட்டோர், வடம் பிடித்து துவக்கி வைத்தனர். பக்தர்களின் வெங்கட்ரமணா கோவிந்தா கோஷங்களுக்கு மத்தியில், தேர் அசைந்தாடி சென்றது.

மாலை, 5:45 மணியளவில், கோவில் தெற்கு கோபுர வாசலை வந்தடைந்தது. அங்கு, தெற்கு கோபுர வாசல் திறக்கப்பட்டு, சாயரட்சை பூஜை நடத்தப்பட்டது. மாலை, 6:10 மணிக்கு, பூ மார்க்கெட் சந்திப்பை சென்றடைந்தது. போதுமான அளவு சோடியம் விளக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால், தேர் எளிதாக கிழக்கு நோக்கி திரும்பியது. பூ மார்க்கெட் வியாபாரிகள், தேர் மீது மலர் துõவி வழிபட்டனர். 6:50 மணியளவில், நிலையை தேர் வந்தடைந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, சாந்தி பூஜையை தொடர்ந்து, சோமாஸ்கந்தர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப் பெருமாள், தேரில் இருந்து இறங்கினர். சப்பரத்தில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகள், தேரோடிய வீதிகளில் உள்ள வண்டித்தாரை பார்க்கும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, கோவிலுக்குள் எழுந்தருளலும் நடைபெற்றது. விஸ்வேஸ்வரரும், ஸ்ரீவீரராகவப் பெருமாளும், தம்பதி சமேதராக குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஆறு தாண்டிச் செல்லும் பரிவேட்டை நிகழ்ச்சி, இன்று நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தெற்கு ரத வீதியில் ரூ. 14 லட்சம் செலவில் நிழல் தரும் பந்தல் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar