வால்பாறை: வால்பாறை கோவிலில் நடந்த துர்க்கை அம்மன் சிறப்பு பூஜையில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இந்தக்கோவிலின் இடது புறம் துர்க்கை அம்மன் எழுந்தருளியுள்ளார். கோவிலில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடக் கிறது. நேற்றுமுன்தினம் மாலை, 4:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.