திருக்கனுார்: செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு திரவுபதியம்மன், முத்து மாரியம்மன் கோவிலில், தீமிதி விழா கடந்த 19ம் தேதி மாலை 6:00 மணிக்கு கொடியேற்றதுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபி ஷேகம் மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 26ம் தேதி காலை 10:00 மணிக்கு பகாசூரனுக்கு சாதம் எடுத்துச் செல்லுதல் நிகழ்ச்சியும், 29ம் தேதி மதியம் 1:00 மணிக்கு மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து, 31ம் தேதி திரவுபதியம்மன், அர்ச்சுணன் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று முன் தினம் காலை 10:00 மணிக்கு படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீ மிதி விழா நடந்தது. நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.