Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலில் ஞானசம்பந்தருக்கு ... வீரட்டானேஸ்வரர் கோவிலில்  பவுர்ணமி பூஜை! வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
300 ஆண்டுக்குபின் திருப்பூர் வீரராகவப் பெருமாள் தெப்பத்திருவிழா!
எழுத்தின் அளவு:
300 ஆண்டுக்குபின் திருப்பூர் வீரராகவப் பெருமாள் தெப்பத்திருவிழா!

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2015
11:06

திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் குளத்தில், தாயார்களுடன் எம்பெருமான் நேற்று எழுந்தருளினார். திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், வைகாசி விசாகத்தேர்த்திருவிழா நடந்து வருகிறது. 10ம் நாள் திருவிழாவான தெப்பத்திருவிழா நேற்றிரவு நடந்தது. இரண்டு கோவில்களிலும் தெப்பக்குளம் இல்லாமல் இருந்ததால், இதுநாள் வரை, தட்டில் நீர் நிரப்பி, கொண்டாடப்பட்டது.பெருமாள் கோவில் திருப்பணியின்போது, புதிதாக தெப்பக்குளம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, 300 ஆண்டுக்குபின், தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நேற்றிரவு நடந்தது. இதற்காக, தெப்பக்குளத்தில், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் தயார் செய்யப்பட்டது. 8:20 மணிக்கு, சக்கரவர்த்தி அலங்காரத்தில், பூமி நீளாதேவி தாயார், கனகவல்லி தாயாருடன் பெருமாள் குளத்துக்கு எழுந்தருளினார். பஞ்சவர்ண குடை பிடிக்க, சுவாமிக்கு சாமரம் வீசி, குளத்துக்குள் சுற்றி வந்தார். பின், மீண்டும் சப்பரத்தில் எழுந்தருளி, தேரோடும் வீதிகளில் உலா வந்தார். ஸ்ரீவிசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலிலும், தெப்பத்திருவிழா நடந்தது.

அதிகாரிகள் அலட்சியம்: 300 ஆண்டுகளுக்கு பின் தெப்பத்திருவிழா நடத்தப்படும் நிலையில், அறநிலையத்துறை முறையாக ஏற்பாடு செய்யவில்லை. டிரம்களை பயன்படுத்தி தெப்பம் அமைத்திருந்தாலும், குளத்தை சுற்றி வரும் வகையிலும், எடை தாங்கும் வகையிலும் அமைக்கவில்லை.அதனால்,தெப்பம் சுற்றி வருவதில் சிக்கல் ஏற்பட்டது; பக்தர்கள் குளத்திற்குள் இறங்கி, தாங்கி பிடித்து, இழுத்து வந்தனர். தெப்பம் ஒரு பக்கம் சாய்ந்தும், படிகளில் மோதியும் வந்தது. இனியாவது, விழா நடத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டக்கூடாது என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar