பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த 2ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு உற்சவர் அம்பாள் பெரியநாயகி ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் நான்கு மாட வீதிகளை வலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு 10:00 மணிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.