கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் ராமானுஜம் நகரில் உள்ள சீரடி ஜெய் சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. மகா கும்பாபி÷ ஷகத்தையொட்டி, கடந்த 3ம் தேதி தேவதா அனுக்ஞை, விநாயகர் பூஜையுடன் துவங்கியது. மாலை வாஸ்து ஹோமம், பிரவேசபலி மிருதங்கிரகணம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. நேற்று காலை 8:00 மணிக்கு 2ம் கால யாக பூஜை துவங்கியது. காலை 10:15 மணிக்குமேல் 10:45 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.