Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கூடல்நகர் வரசித்தி விநாயகர் ... வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்! வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரங்கநாதர் கோவிலில் 7.6.15 ம்தேதி கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
அரங்கநாதர் கோவிலில் 7.6.15 ம்தேதி கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2015
11:06

மேட்டுப்பாளையம் :காரமடை அரங்கநாதர் கோவிலில் மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு, எட்டு கோபுரங்களில், 16 கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.காரமடை அரங்கநாதர் கோவில் மகாகும்பாபிஷேகம், 7.6.15ம்தேதி காலை, 9:15ல் இருந்து, 9:45 மணிக்குள் நடக்கிறது. விழாவின் மூன்றாம் நாளான 5.6.15 அன்று காலை, 8:00 மணிக்கு சதுஸ்தான பூஜை நடந்தது.இதில் நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம், வேதபாராயணம் வாசிக்கப்பட்டது.

பின், கும்ப ஆவாஹணம், த்வார, கும்ப, மண்டல, அக்னி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, வாஸ்து பூஜையும், வாஸ்து ஹோமமும், இரண்டாம் கால யாக பூஜையும் நடந்தன.கோவிலில் ராஜகோபுரம், சொர்க்க வாசல் மற்றும் மூலவர், ஆண்டாள், தாயார் சன்னதிகள், வாசுதேவர், ராமானுஜர், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு என, எட்டு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.கோபுரத்திற்கு கலசங்கள் எடுத்துச் சென்று, அமைக்கும் பணிகள் மாலையில் நடந்தன.

ராஜகோபுரத்தில், ஏழு கலசங்கள், சொர்க்க வாசல் கோபுரத்தில் மூன்று கலசங்கள், மீதமுள்ள கோவில்களில் தலா ஒன்று வீதம், மொத்தம் எட்டு கோபுரங்களில், 16 கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.இரவு மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. பின், பூர்ணாஹுதியும், சாற்றுமுறையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், 30க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.மகாகும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பெட்டத்தம்மன் (அரங்கநாயகி தாயார்) கோவிலில், புதிய மலைப்பாதையில், படிபூஜை மற்றும் அரங்நாதருக்கு சீர்வரிசை சமர்ப்பிக்கும் விழா நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, தக்கார் மற்றும் உதவி ஆணையர் ஜீவானந்தம், செயல் அலுவலர் நந்தகுமார், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar