பாலமேடு:பாலமேடு அருகேவுள்ள 66 உசிலம்பட்டி பெருங்கரை அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி கணபதி ஹோமம் உட்பட பல்வேறு யாகசாலை பூஜைகள் இரு நாட்களாக நடந்தன. நேற்று காலை கோயில் கோபுரம் உட்பட மூலவருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஊராட்சித் தலைவர் பெத்திராஜா, நிர்வாகி தனராஜ், பூஜாரி பிச்சை உட்பட பலர் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.