ஆழிகண்டீஸ்வரர் கோவிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2015 12:06
ஒக்கியம் துரைப்பாக்கம்:திருஞானசம்பந்தர் குருபூஜையை முன்னிட்டு, 13 விதமான அபிஷேகங்கள் நடைபெற்றன.ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ள, ஆழிகண்டீஸ்வரர் கோவிலில், மடிப்பாக்கத்தை சேர்ந்த, அப்பர் அடிகள் உழவார பணிமன்றத்தின் சார்பாக, திருஞானசம்பந்தர் குருபூஜை, நேற்று முன்தினம், மாலை 6:00 மணிக்கு துவங்கி, இரவு 8:30 மணி வரை நடைபெற்றது.
இந்த இந்த சிறப்பு பூஜையில் திருஞானசம்பந்தருக்கு, ௧௩ விதமான அபிஷேகங்கள் நடந்தன. திருமுறைகள் ஓதப்பட்டன.