Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன் கோவிலில் 108 கலசாபிஷேகம்! லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் தேரோட்டம்! லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனியில் வெள்ளோட்டம்; ஆடியில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
ஆனியில் வெள்ளோட்டம்; ஆடியில் தேரோட்டம்!

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2015
01:06

அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெரும ாள் கோவிலில் உபய தாரர் வழங்கிய ரூ.90 லட்ச  த்தில் புதிய தேர் செய்யும் பணிக ள் முடிந்து விட்டதால் ஆனியில் வெள்ளோட்டமும், ஆடியில் தேரோட்டமும் நடக்கிறது.

இக்கோவில் ஆடித் தேரோட்டம் தனிச்சிறப்பு பெற்றது. தற்போதுள்ள தேர் 300 ஆண்டுகள் பழமையானது. மலைப் பாதையில் ஆடி, அசைந்து ஓடியதில், தேரில் இருந்த பல சிற்பங்கள் சிதைந்து விட்டன. தேரும் ஆட்டம் கண்டு விட்டது. தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி வரதராஜன் ஆகியோரின் முயற்சியால் மதுரை பக்தர் ஒருவர் ரூ.90 லட்சத்தில் புதிய தேர் செய்து கொடுக்க முன்வந்தார்.

பணிகள் துவங்கப்பட்டு, தேர் செய்வதற்கான தேக்கு, வேங்கை மரங்கள் மியான்மர் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. பொன்னமராவதி ஸ்தபதி செல்வம் தலைமையில் 15 பேர், தேர் செய்யும் பணியில் ஈடுபட்டுள் ளனர். தேரில் பெருமாளின் பல்வேறு அவதாரங்கள் மற்றும் மாதவன், கேசவன், ரதி, மன்மதன், மன்னர் திருமலை நாயக்கர், பூதங்கள், கஜேந்திர மோட்சம், சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன.

ஸ்தபதி செல்வம் கூறியதாவது: புதிய தேர் 5 நிலைகள் கொண்டவை. ஒவ்வொரு நிலையின் கீழ் பகுதியில் 124, மேலே 62 சிற்ப ங்க ள் என 500க்கு ம் மேற்பட்ட சிற்பங்கள் பொருத்தப்படுகின்றன. சிற்பங்கள் அனைத்தும் பெருமாளின் அவதாரங்களையும், கோயிலில் நடைபெறும் திருவிழாக்களையும் மையமாக வைத்து நுணுக்கமாக கை வேலைப்பாடுகளால் செய்யப்பட்டுள்ளன என்றார்.

கோவில் நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. சக்கரங்கள் மட்டு ம் பழைய தேரில் இருந்த " ஹைட்ராலிக் சக்கரங்களை வைத்துள்ளோம். ஆனியில் வெள்ளோட்டம் விட அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். வெள்ளோட்டம் முடிந்ததும் ஆடியில் புதிய தேரோட்டம் நடக்கும். கண்ணாடி கூண்டில் பழைய தேரை பக்தர்கள் பார்க்கும் வகையில் பாதுகாக்கப்படும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar