சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் வரும் 10ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2011 11:07
உடுமலை : உடுமலை பூளவாடி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. உடுமலை அருகே பூளவாடி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது; மாலை 6.00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி பூஜை நடக்கிறது. வரும் 10ம் தேதி காலை 6.00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, காலை 9.00 மணிக்கு பூர்ணாகுதி, காலை 9.30 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகம்; காலை 9.45 மணிக்கு ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 10.00 மணிக்கு மகாபிஷேகம், காலை 10.30க்கு அன்னதானம், மாலை 6.00 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8.00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.