விருத்தாசலம்: வைகாசி மாத கடைசி செவ்வாயையொட்டி, கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம், மணவாளநல் லூர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் நேற்று காலை சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.