பழநி: பழநி கோயில் உண்டியல் வசூல் 11 நாட்களில் ரூ. ஒரு கோடியே 29 லட்சத்து 36 ஆயிரம் கிடைத்துள்ளது.பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 571 கிராம், வெள்ளி 3 ஆயிரத்து 850 கிராம், வெளிநாடுகளின் கரன்சி 315, ரொக்கம் ரூ. ஒரு கோடியே 29 லட்சத்து 36 ஆயிரத்து 577 கிடைத்துள்ளது.தங்கத்திலான வேல், தொட்டில், செயின், வளையல், மோதிரம், நாணயம், திருமாங்கல்யம் மற்றும் வெள்ளியிலான ஆள் உருவம், வேல், பாதம், கொலுசு போன்றவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.