Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் முருகன் கோயிலில் ... பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறையை திறக்க ‌‌தடை! பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறையை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிக்காக சபரிமலையில் புதிய குடிநீர் தொட்டி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2011
10:07

சபரிமலை : பக்தர்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படாமல் இருக்க எரிமேலியில் தடுப்பணை அமைக்கவும், சபரிமலையில் நான்கு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் மண்டல, மகரஜோதி உற்சவ காலங்களில் பக்தர்களுக்கு சபரிமலை, பம்பை, நிலக்கல், எரிமேலி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு கேரளா மட்டுமன்றி, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில் அதிகளவு பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் மண்டல, மகர ஜோதி உற்சவத்தின்போது தான் தரிசனம் செய்ய வருகின்றனர். இதனால், சபரிமலை, எரிமேலி, பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து மாநில தேவஸ்வம் போர்டு அமைச்சர் வி.எஸ்.சிவக்குமார் தேவஸ்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், "இவ்வாண்டு நடைபெற உள்ள மண்டல மற்றும் மகரஜோதி உற்சவ காலத்தின்போது சபரிமலையில் தற்போதுள்ள குடிநீர் குழாய்களை மாற்றி, புதிய குழாய்கள் அமைக்கப்படும். எரிமேலி குடிநீர் வினியோக திட்டம் செயல்படுத்தப்படும். நிலக்கல் பகுதியில் மழை நீர் சேகரிப்பு திட்டம் அமைக்கப்படும். பம்பை பகுதியில் தடுப்பணைகள் மற்றும் குளியலறைகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.எரிமேலியில் புதிய தடுப்பணை அமைப்பதற்கான மதிப்பீட்டு தொகை தயாரிக்கப்படும். சபரிமலையில், நான்கு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்கத் தொட்டி நிர்மாண பணிகள் முடிந்து விட்டது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டங்கள் அனைத்தும் வரும் சீசன் காலத்திற்குள் முடிக்கப்பட்டால், எரிமேலி, பம்பை, நிலக்கல், சபரிமலை பகுதிகளில் செல்லும் பக்தர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருக்காது என தேவஸ்வம் அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar