வால்பாறை: வால்பாறை, ஷீரடிசாய்பாபா கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரண்டனர். மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பஜன் பாடல்கள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜையும் நடந்தது. பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை துவாரகாமாயி அறக்கட்டளை நிறுவனர்கள் சாய் செல்வரத்தினம், பிரவிணா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.