மேலுார்: மேலுார் மெயின் ரோடு ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமத்துடன் மூன்று நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை சிவாச்சாரியார்கள் தட்சிணாமூர்த்தி, நடராஜன் கும்பத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். எஸ்.ஐ.,க்கள் மகாராஜன், சுரேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.