மதுரை: திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் ரூ.ஒரு கோடியில் மின்விளக்குகள் அமைக்க சுற்றுலாத்துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
பக்தர்கள் இரவு நேரத்திலும் கிரிவலப்பாதையை பயன்படுத்தும் வகையில் குறுகிய இடைவெளிகளில் மின்கம்பங்கள் அமைத்து அழகுபடுத்தும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன. இதற்கான நிதியை சுற்றுலாத்துறை மாநகராட்சியிடம் ஒப்படைத்துள்ளது. 5 கி.மீ., தூரத்தில் எந்த பகுதிகளில் மின்விளக்குகள் அமைப்பது என்பது குறித்து பொறியாளர்கள் முதற்கட்ட ஆய்வுகள் நடத்தியுள்ளனர். இப்பணிகளின் போது கிரிவலப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.