அம்பாசமுத்திரம்:திருநெல்வேலி மாவட்டம், அம்பையில், மேலப்பாளையம் தெருவில், திருமூலநாத சுவாமி - உலகாம்பிகை கோவில் உள்ளது.கோவில் தேர், 23 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பின், வரும் 30ல் தேரோட்டம் நடக்க உள்ளது.அதையொட்டி, நேற்று முன்தினம் தேர் வெள்ளோட்டம் நடந்தது. அதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.