விருத்தாசலம்: சஷ்டியையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. விருத்தாசலம், மணவாளநல்லுõர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில், நேற்று காலை பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 12:00 மணிக்கு வெள்ளிக் கவசத்தில் கொளஞ்சியப்பர் சுவாமி அருள்பாலித்தார். விருத்தகிரீஸ்வரர் கோவிலில், வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. வேடப்பர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.