பதிவு செய்த நாள்
23
ஜூன்
2015
11:06
இந்த உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் அறிந்தோ, அறியாமலோ பாவச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதன்பிறகு, மனசாட்சி உறுத்துவதால், இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். ஆனால், தவறு செய்தவர்களை இறைவன் மன்னிப்பதில்லை. நிச்சயமாக, தண்டனை வழங்கியே தீருவான். ஆனால், மூன்று வகையினர் இந்த தண்டனையிலிருந்து விலக்குப்பெற வழியுண்டு.தவறு செய்துவிட்டோம் எனத் தெரிந்தால், அதை திருத்திக் கொள்ள வேண்டும். மீண்டும் அதே தவறை செய்யக்கூடாது. குறிப்பாக, உண்மையாக நடக்க வேண்டும். கோபமாகப் பேசுவதை தவிர்க்க வேண்டும். தனது தவறுகளுக்காக மிகவும் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆக, உண்மையாளன், கோபப்படாதவன், இறைவனிடம் மன்னிப்பு கேட்பவன் ஆகியோரை மட்டும் அல்லாஹ் மன்னிக்கிறான். “உண்மைக்கு மாறாக பேசுவதைவிட்டு, தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தை தடுத்துக் கொள்பவனை விட்டு, மறுமை நாளில் வேதனையை அல்லாஹ் அகற்றி விடுவான். இறைவனிடம் மன்னிப்பு கோருபவனை அல்லாஹ் மன்னித்து விடுவான்,” என்கிறார் நபிகள் நாயகம்.
ரமலான் காலத்தில் மட்டுமல்ல. எப்போதுமே நல்வழியில் செல்ல முயற்சி செய்யுங்கள்.