காரைக்கால்: காரைக்காலில் மாங்கனி விழாவின்போது ஊர்வலத்தில் பயன்படுத்தும்படும் பழமைவாய்ந்த பொம்மைகள் மீது வர்ணம் பூசப்பட்டு தயார்நிலையில் உள்ளது. காரைக்காலில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு கோவில் உள்ளது. இங்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது.
இதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் இவ்வாண்டு கடந்த 7ம் தேதி தொடங்கியது. வரும் 29ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு, மறுநாள் 30ம் தேதி காரைக்கால் அம்மையார், பரமதத்தர் திருகல்யாணம், ஜூலை 1ம் தேதி சிவபெருமான் பிச்சாண்டவ மூர்த்தியாக வீதி உலா வரும்போது, பக்தர்கள் மாங்கனி வீசும் நிகழ்ச்சி நடக்கும்.
பிரசித்தி பெற்ற இத்திருவிழா தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறும். 30 நாட்களும் நாகப்பட்டினம் தேசிய நெடுங்சாலை தடுக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்படும். சாலையின் இருபக்கங்களிலும் கடைகள் மற்றும் பந்தல் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. அதேபோல், விழாவின்போது ஊர்வலத்தில் பயன்படுத்தும்படும் பழமைவாய்ந்த பொம்மைகள் மீது வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.மேலும் மாங்கனி திருவிழா அனைத்து ஏற்படுகளை கோவில் நிர்வாகம் செய்துவருகின்றனர்.