பதிவு செய்த நாள்
25
ஜூன்
2015
12:06
திருத்தணி: முருகன் கோவில் உண்டியலில், பக்தர்கள், 28 நாட்களில், 52.76 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர். இவர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, இங்குள்ள உண்டியல்களில், ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த வகையில், கடந்த, 28 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் அளித்த காணிக்கை, நேற்று முன்தினம் கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. இதில், 52 லட்சத்து, 76 ஆயிரத்து, 976 ரூபாய் ரொக்கம், 728 கிராம் தங்கம் மற்றும் 6,560 கிராம் வெள்ளி ஆகியவை வருவாயாக கிடைத்துள்ளது.