பதிவு செய்த நாள்
26
ஜூன்
2015
11:06
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், 31 லட்சம் ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி இருந்தனர். விழுப் புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நேற்றுமுன்தினம் நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் பிரகாஷ், ஜோதி ஆகியோர், உண்டியல் எண்ணும் பணியை கண்காணித்தனர். பக்தர்கள், 31 லட்சத்து 17 ஆயிரத்து 460 ரூபாய் ரொக்கம், 193 கிராம் தங்க நகைகள், 175 கிராம் வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். ஆய்வாளர் கோவிந்தராஜ், அறங்காவலர் குழு தலைவர் வடிவேல், தலைமை பூசாரி சேகர் மற்றும் அறங்காவலர்கள், மேலாளர்கள் முனியப்பன், மணி அலுவலக எழுத்தர் சண்முகம் உடன் இருந்தனர்.