ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடந்தது. விழா கடந்த 18 ம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகின்றன. 9ம் விழாவான நேற்று காலை 8 மணிக்கு செப்பு தேரோட்டம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் செயல் அலுவலர் ராமராஜா, டி.எஸ்.பி., முரளிதரன், வாசுதேவன் பட்டர், அனந்தராமன் பட்டர் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.