Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரங்கநாதப் பெருமாள் கோவிலில் ஏகாதசி ... மழைவேண்டி கொடும்பாவி இழுத்து சிறப்பு பூஜைகள்! மழைவேண்டி கொடும்பாவி இழுத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,200 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலைக்கு சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
1,200 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலைக்கு சிறப்பு பூஜை!

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2015
10:06

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே  ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முந்தைய, பழமையான மகாவீரர் சிலைக்கு சிறப்பு பூஜைகள்   செய்யப்பட்டது. உளுந்தூர்பேட்டை தாலுகா, பாதூரில் ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, பின் பகுதியில், விவசாயி ராயர்  என்பவர்,  பைப் லைன் அமைக்க பள்ளம் தோண்டியபோது, பழமை வாய்ந்த சிலை கிடைத்தது. அந்த சிலை சமண மதத்தை சேர்ந்த, 24 தீர்த்த ங்கர்களின்  கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் சிலையாகும்.  ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முந்தைய, கி.பி., 8ம் நுõற்றாண்டில், பல்லவர் காலத்தைச்  சேர்ந்த,  இக்கற்சிலை, 5 அடி உயரமும், 3 அடி அகலமும் உள்ளது. மகாவீரர் தியானத்தில் இருப்பது போன்ற,  இச்சிலையை ஜெயினர்கள் பலர் ÷நரில்  சென்று பார்த்தனர். இந்நிலையில் அச்சிலையை அமைக்க கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்தனர். அதன் முதற்கட்டமாக மகாவீரர்  சி லையை, பாதூர் அம்மன் கோவில் அருகே கொண்டு சென்று, ஸ்தபானம்செய்யப்பட்டது. அப்போது மகாவீரர் சிலைக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.  இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஜெயினர்களும் அப்பகுதி மக்களும் கலந்து கொண்டு   வழிபட்டனர். பழமை வாய்ந்த மகாவீரர் சிலையை நிறுவி, கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலக நன்மை வேண்டி திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவில் ராசிமண்டல குரு பகவானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar