Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1,200 ஆண்டுகள் பழமையான மகாவீரர் ... பெருமாள் கோவில் உழவார பணிகள் களம் இறங்கிய தன்னார்வலர்கள்! பெருமாள் கோவில் உழவார பணிகள் களம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழைவேண்டி கொடும்பாவி இழுத்து சிறப்பு பூஜைகள்!
எழுத்தின் அளவு:
மழைவேண்டி கொடும்பாவி இழுத்து சிறப்பு பூஜைகள்!

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2015
10:06

திருவெண்ணெய்நல்லூர்:திருவெண்ணெய்நல்லூர் அருகே மழை வேண்டி, கிராம மக்கள் கொடும்பாவி கட்டி இழுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். திருவெண்ணெய்நல்லூர் அடுத்த இருவேல்பட்டு கிராமத்தில், மழை வேண்டி கிராம மக்கள் ராகு காலத்தில் கொடும்பாவி கட்டி இழுத்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். நேற்று மாலை 4:30 மணிக்கு, பெண் ராட்சத உருவத்தை பொம்மையாக செய்து, ஒரு வண்டியில் படுக்க வைத்து, தெருத் தெருவாக, ஒப்பாரி பாடியபடி, இழுத்துச்சென்றனர். பின், இந்த பொம்மையை ஏரிக்கரையில் வைத்தனர். மாலை 5:00 மணிக்கு வேம்பு மரத்தின் கீழ், மழைவேண்டி வருணபூஜைகள் செய்தனர். தொடர்ந்து கருங் கற்கலான கங்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அபிஷேகம் செய்தனர்.இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், மழை வராவிட்டால், கங்கையம்மனுக்கு பூஜைகள் செய்து சிலையை நிமிர்த்தி வைப்போம். போதுமான மழை பெய்தவுடன் ஏரி உடையாமல் இருக்க, அம்மனின் சிலையை வேப்பமரத்தின் அருகில் கவிழ்த்து போட்டு விடுவோம். தற்போது மழை பெய்யாததால், சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தண்ணீர் ஏரியில் கலக்கும் வரை நீரை சிலை யில் ஊற்றுவோம். கொடும் பாவி கட்டி இழுத்த களிமண் பொம்மை, மழை பெய்யும் போது கரைந்து ஏரிக்குள் சென்று விடும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிபதினெட்டாம் பெருக்கு விழா, நதி, ஆற்றங்கரைகளிலும் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar