பதிவு செய்த நாள்
01
ஜூலை
2015
12:07
திருவள்ளூர்: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, வரும் 5ம் தேதி, திருவள்ளூரில் உள்ள யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடத்தில், குருபெயர்ச்சி பரிகார மகா யாகம் நடக்கிறது. திருவள்ளூர் பூங்கா நகரில், யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், ஞானமங்கள சனீஸ்வர பகவான் சன்னிதி அமைந்துள்ளது. வரும் 5ம் தேதி இரவு, 11:00 மணிக்கு, குரு பகவான், கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடம் பெயர்கிறார். இதை முன்னிட்டு, யோக ஞான தட்சிணாமூர்த்திக்கு, அன்று இரவு, 8:00 மணிக்கு கணபதி பூஜை, சூக்த ஹோமம், காளி ஹோமம், லட்சுமி ஹோமம், யோக ஞான தட்சிணாமூர்த்தி அஸ்திர ஹோமம், மூலமந்திர ஹோமம் ஆகியவை நடத்தப்படுகின்றன. இரவு, 9:00 மணி மகா பூர்ணாஹூதியும், இரவு, 9:15 மணிக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகமும், இரவு, 11:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறும். ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளை கொண்டவர்கள், இந்த மத்தில் பரிகாரம் செய்து கொள்ளலாம்.