ராமேஸ்வரம் உண்டியல்களில் ரூ. 50.34 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2015 12:07
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 27 நாட்களுக்கு பிறகு, நேற்று சுவாமி, அம்மன் சன்னதி மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புறமுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் கொட்டப் பட்டது. அதில் இருந்த காணிக்கைகளை ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளி மாணவிகள், கோயில் ஊழியர்கள் எண்ணினர். உண்டியல்களில் ரூ. 50 லட்சத்து 34 ஆயிரத்து 106 ரொக்க பணம், 81 கிராம் தங்கம், 6 கிலோ 750 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், மேலாளர் லெட்சுமி மாலா, கண்காணிப்பாளர் கக்காரின், இளநிலை பொறியாளர் ராமமூர்த்தி, பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் பலர் பங்கேற்றனர்.