செல்லமுத்துமாரியம்மன், வீரன் சுவாமிகளுக்கு மகா அபிஷேக பால்க்குட விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2015 12:07
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே சின்னத்தும்பூர் செல்லமுத்துமாரியம்மன் மற்றும் வீரன் சுவாமிகளுக்கு ஸம்வத்ஸரா அபிஷேக நிகழ்சியுடன், பால்க்குட ஊர் வல நிகழ்ச்சி நடந்தது. திருவாரூர்–வேதாரண்யம் சாலையில் உள்ள சின்னத்தும்பூரில் கடந்த ஏழு ஆ ண்டுகளுக்குப் முன் மரளாளிகளால் செல்லமுத்துமாரியம்மன் மற்றும் வீரன் சுவாமிகளுக்கு கோவில் கட்டி கும்பா பிஷேகம் நடத்தப்பட்டது. இக்கோவில் ஏழாம் ஆண்டு பூர்த்தி ஸம்வத்ஸரா அபிஷேக நிகழ்ச்சி மற்றும் பால்க்குட ஊர்வலம் நேற்று துவங்கியது. காலை 10.மணிக்கு பால்க்குட வீதி யுலா நிகழ்ச்சியும், 10.15 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, 12.15 ம ணிக்கு மகா பூர்ணாஹூதியுடன் மகா அபிஷேகம், தீபாரதனை நிகழ்ச்சியும் மதியம் 1.00 மணிக்கு அன்னதானம் இரவு 7.00 மணிக்கு அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது பொதுமக்கள் ஐமுக குத்துவிளக்கேற்றி கும்பத்துடன் ஊர்வலமாக வந்தனர். விழா ஏற்பாடுகளை சென்னை கோபாலகிருஷ்ணன்–பிரேமாவதி,நாகை ஆடி ட்டர் ராகவன்–சித்ரா, கஸ்துாரிரங்கன்–ஜானகி, நார்த்தாமங்கலம் தினகரன் குடும்பத்தினர் செய்திருந்தனர். விழாவில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன், ராஜ் டி.வி., அகடன்விகடன் நடுவர் நாகை நாகராஜன் குழுவினரின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சி நடந்தது.