உளுந்துõர்பேட்டை: கூத்தாண்டவர் கோவில் உண்டியலில் பக்தர்கள் 3.99 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர். உளுந்துõர்பேட்டை தாலுகா கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நிறைவடைந்ததை தொடர்ந்து, கோவில் உண்டியல் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்து அறநிலைய துறை இணை ஆணையர் பிரகாஷ், செயல்அலுவலர் முத்துலட்சுமி, ஆய்வாளர் சரவணன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதில் 3 லட்சத்து 99 ஆயிரத்து 498 ரூபாய் பணமும், 15.500 கிராம் தங்கம், 5 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.